அப்பா – மகன்

1 Min Read

என்ன சம்பந்தம்?
மகன்: சிதம்பரம் நடராஜர் கோவிலை புராதன சின்னமாக அறி விக்க வில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளதே, அப்பா!
அப்பா: புராணத்திற்கும் – புராதனத்துக்கும் என்ன சம்பந்தம், மகனே?
***
அவர்களின் புத்தி, யுக்தி…!
மகன்: மக்களவைத் தேர்தலுக்குப் பின் பி.ஜே.பி. அல்லாத மாநில ஆட்சிகளைக் கவிழ்ப்போம் என்று பி.ஜே.பி. மிரட்டல் என்று செய்தி வந்துள்ளதே, அப்பா!
அப்பா: மிரட்டலும், உருட்டலும்தானே அவர்களின் புத்தி, யுக்தி, மகனே?
***
அடிப்படை விதி தெரியாதவர்!
மகன்: அரசியலையும், ஆன்மிகத்தையும் பிரித்துப் பார்க்கக் கூடாது என்று பி.ஜே.பி. அண்ணாமலை கூறி யிருக்கிறாரே, அப்பா!
அப்பா: தேர்தலில் மத அடிப்படையில் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற விதிகூட தெரியாதவர்தான் தமிழ்நாட்டின் பி.ஜே.பி. தலைவர் என்பது தெரிகிறது, மகனே?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *