செய்திச் சிதறல்…!

viduthalai
1 Min Read

மவுனம் காப்பது ஏன்?
இந்தியாவை பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடாக பி.ஜே.பி. மாற்றியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிராகக் குற்றம் நடைபெற்றால், கொதித்து எழும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி ராணி, எதிர்க்கட்சிகள் ஆட்சி புரியாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றால், மவுனம் காப்பது ஏன்? காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி
இளைஞர்களுக்குத் திருமணம் நடக்காது: அகிலேஷ் யாதவ்!
வரும் மக்களவைத் தேர்தலில் ஜனநாயகம் வென்றால் மட்டுமே கிடைத்த உரிமைகள் நிலைத்திருக்கும். இன்னும் பத்து ஆண்டுகள் பி.ஜே.பி. ஆட்சியில் நீடித்தால், வேலைகளுக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு வயதாகி, திருமணம் நடக்காது என்றார் உத்தரப்பிரதேச மாநில மேனாள் முதலமைச்சர் அகிலேஷ்.
கெஜ்ரிவால் கைது ஏன்?
ஒன்றிய பா.ஜ.க. அரசு மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்குத் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்குக் கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இந்தப் பிரச்சினையைத் திசை திருப்ப வேண்டுமென்ற காரணத்திற்காகத்தான் டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *