தமிழ்நாட்டில் ராகுல் – கமல் இணைந்து பிரச்சாரம்

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 27 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்வது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சில, ம.நீ.ம.வுக்கு வழங்கப்படும் என கூறப்பட்டது. ஆனால், காங்கிரஸ் தொகுதிகளை விட்டுக் கொடுக்க விரும்பாததாலேயே ம.நீ.ம. தேர் தலில் போட்டியிட முடியாத சூழல் உருவானதாக அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப, கமல் ஹாசனின் பிரச்சார பயண திட்டத் தில் காங்கிரஸ் வேட்பாளர்களின் தொகுதிகள் இடம்பெறவில்லை.

இந்நிலையில், சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள ம.நீ.ம. தலைமையகத்தில் கமல்ஹாசனை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, மூத்த தலைவர் கே.வீ.தங்கபாலு உள்ளிட்டோர் சந் தித்தனர். பின்னர் செய்தியாளர்களி டம் செல்வப்பெருந்தகை கூறும் போது, எந்த வித நிபந்தனையு மில்லாமல் “இந்தியா” கூட்டணிக்கு ஆதரவு அளித்தமைக்காக கமலுக்கு வாழ்த்து சொல்லுமாறு ராகுல் கூறியிருந்தார்.
தேர்தல் தொடர்பாக உரை யாடினோம். எந்தெந்த தொகுதி யில் பிரச்சாரத்தை மேற்கொள்வது என்பது குறித்து மேலும் உரை யாட இருக்கிறோம். விரைவில் கமல் ஹாசனுடன் ராகுல் பேசுவார்.
இருவரும் சேர்ந்து பிரச்சாரம் மேற்கொள்வது குறித்து திட்ட மிடப்பட்டு வருகிறது. ராகுல் காந்தி நேசிக்கும் தலைவர் கமல்ஹாசன் என்றார்.முன்னதாக, ராகுல் காந்தி பிரச்சாரம் தொடர்பான விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என செல்வப்பெருந்தகை தெரிவித் திருந்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *