தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

1 Min Read

காவேரிப்பட்டணம், மார்ச் 27- கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகளாக தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் கீழ் கண்டவர்களை அறிவித்தனர்.

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகளாக காவேரிப்பட்டணம் குண்டலப்பட்டி கிராமத் தைச் சேர்ந்த கோ. திரா விடமணி மாவட்ட தலை வராகவும், ஊற்றங்கரை பகுதி

சேர்ந்த செ.பொன்முடி மாவட்ட செயலாளராகவும், பொதுக்குழு உறுப்பினர் களாக த.அறிவரசன், கா.மாணிக்கம் ஆகியோர் களை நியமனம் செய்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து காவேரிப்பட்டணம் பாலக்கோடு பிரிவு சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதிதாக தேர்வு செய்யப் பட்டுள்ள நிர்வாகிகள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் கதிரவன், ஒன்றிய தலைவர் செல்வம், ஒன்றிய செயலாளர் செல்வேந்திரன், மேனாள் ஒன்றிய தலை வர் சி.சீனிவாசன், மாவட்ட இளைஞரணி மேனாள் தலைவர் ஆறுமுகம், மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து ராஜேசன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்கள் வே.புகழேந்தி, மேனாள் ஒன்றிய அமைப்பாளர் ராஜா, இராஜேந்திரபாபு, ரமணன், சுபயோகம்,செந்தில் உள்ளிட்ட கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *