சாமி சக்தி புஸ்வாணம் சிங்கப்பெருமாள் கோயிலில் 16 கிலோ சிலை திருட்டு

Viduthalai
1 Min Read

சென்னை, செப். 24 – மறை மலைநகர் அடுத்துள்ள மகிந்திரா சிட்டியில் தேவி கருமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பூஜைகள் முடிந்து இரவு 7 மணிக்கு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். 

நேற்று (23.9.2023) அதிகாலை 5 மணியளவில் கோவில் பணியா ளரான சிங்கப்பெருமாள் கோவில் திருத்தேரி பகத்சிங் நகரைச் சேர்ந்த செல்வா (வயது28) கோவிலை சுத்தம் செய்ய வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட அய்ம்பொன் சிலை, 11 கிலோ எடை கொண்ட காமாட்சி அம்மன் பித் தளை விளக்கு ஆகியவை திருடு போயிருந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் மறைமலைநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள். இது தொடர் பாக வழக்குப்பதிவு செய்து அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *