பக்தியால் விளைந்த கேடு வெள்ளியங்கிரி மலை ஏறிய மூன்று பக்தர்கள் மரணம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

கோவை,மார்ச் 27- கடந்த இரண்டு நாட்க ளில் வெள்ளியங்கிரி மலை ஏறிய 3 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.
கோவையை அடுத்த பூண்டியில் மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வெள்ளியங்கிரி கோயில் உள்ளது. இதில் 7ஆவது மலை உச்சியில் சுயம்புலிங்கமாக காட்சி தருவதாகக் கூறி வெள்ளி யங்கிரி கடவுளாரை தரி சிக்க என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்தி ராவை சேர்ந்த சுப்பாராவ் (68), சேலத்தைச் சேர்ந்த தியாகராஜன் (35)ஆகி யோர் 24.3.2024 அன்று மலையேறிய போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

நேற்று முன்தினம் (25.3.2024) தேனி மாவட் டத்தை சேர்ந்த பாண்டி யன்(40) என்பவர் உயி ரிழந்தார். வன ஊழியர் கள் மூவரின் உடல் களையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து, போளு வாம்பட்டி வனச்சரக அலுவலகம் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், “கடந்த ஒன்றரை மாதங் களில் வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலைக்கு செல்லும் பக்தர்களில் இதய நோய் சம்பந்தப்பட்டவர்கள், மூச்சுச் திணறல் உள்ளவர் கள், உடல்பருமனாக உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், வய தானவர்கள், உடல்நிலை சரியில்லாதவர்கள், கரோனாவால் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சையில் இருந்தவர்கள் அனைவ ரும் மருத்துவரை சந் தித்து முழு உடல் பரிசோதனை செய்த பின் மலை ஏற வேண்டும்.
மேலும், வெள்ளியங் கிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குழுவாக செல்ல வேண்டும். உயிரிழப்புகள் மற்றும் உடல்நலம் பாதிக் கப்படும் நபர்களை அடி வாரத்துக்கு கொண்டு வருவதுவனத்துறைக்கு கடும் சவாலாகஉள்ளது” என தெரிவிக்கப்பட் டுள் ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *