…..செய்தியும், சிந்தனையும்….!

viduthalai
1 Min Read

ஒப்புக்கொண்டிருக்கிறார்!

♦பி.ஜே.பி. தொண்டர்கள் கடுமையாக உழைத்தால் ஆளுநராகக்கூட ஆகலாம்.

– தமிழிசை சவுந்தரராஜன்

>> ஓ, அப்படியா! பி.ஜே.பி.,க்காரர்கள் மட்டும்தான் ஆளுநராக முடியும் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார், பலே, பலே!

அவர் பேச்சும், அவர் கட்சியும்…

♦ என்னை தோற்கடிக்க தி.மு.க. – அ.தி.மு.க. சேர்ந்து போராடுகின்றன.

– பி.ஜே.பி., அண்ணாமலை

>> அவரை தோற்கடிக்க யாரும் தேவையில்லை. அண்ணாமலையின் பேச்சும், அவர் சார்ந்த கட்சியும் போதுமே!
சண்டை போட்டுத்தான்…

♦ கோவை தொகுதிக்குத் தேவையானதை டில்லியில் சண்டையிட்டுப் பெற்றுத் தருவேன்.

– பி.ஜே.பி., அண்ணாமலை

>> ஆக, தமிழ்நாட்டின் தேவைகளுக்கு பி.ஜே.பி. ஆட்சியிடம் சண்டை போட்டுத்தான் பெற வேண்டுமோ?

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *