தமிழர் தலைவரின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம்
சமூகநீதியையும் – மதச்சார்பின்மையையும் – ஜனநாயகத்தையும்
குழிதோண்டிப் புதைக்கும் மதவாத பி.ஜே.பி. கூட்டணியை வீழ்த்திடவும்,
‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தும்
பிரச்சாரப் பெரும் பயணத்தைத் தொடங்குகிறார் தமிழர் தலைவர்!
சென்னை, மார்ச் 27 – கடந்த 10 ஆண்டு களாக ஒன்றிய ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பி.ஜே.பி. – மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வரும் மக்களவைத் தேர்தலில் வீழ்த்திடவும், இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய் வதற்குமான தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் ஏப்ரல் 2 ஆம் தேதி தென்காசியில் தொடங்கி, ஏப்ரல் 17 ஆம் தேதி தஞ்சாவூரில் நிறைவு செய்கிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக மோடி தலைமையில் இயங்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளுக்கு எதிராக வும், ஆர்.எஸ்.எஸின் சித்தாந்தங் களைச் செயல்படுத்தும் வகையிலும் மதவாத அரசாக செயல்பட்டு வருகிறது.
மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, பி.ஜே.பி. ஆளும் மாநிலங் களுக்குச் சாதகமாகவும், பி.ஜே.பி. ஆட்சியில் இல்லாத மாநிலங்களுக்கு விரோதமாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மக்களின் வளர்ச்சித் திட்டங்களின் மீது கவனம் செலுத்தாமல், ராமன் கோவில் கட்டுவது, பூஜை புனஸ்கார நடவடிக்கைகளில் ஈடுபடுவது, ‘ஜெய் ராம்’ கோஷங்களை அரசு நிகழ்ச்சி களில்கூட முழங்குவது, சிறுபான்மை மக்களை வதைப்பது, சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைப்பது, ஹிந்தி, சமற்கிருத மொழிகளுக்கு நிதியைக் கோடிக்கணக்கில் செலவிடுவது, ஊழலில் பி.ஜே.பி.யை மிஞ்சக்கூடிய ஆட்சி இதற்குமுன் இருந்ததில்லை என்று கூறும் அளவுக்கு (எடுத்துக் காட்டு தேர்தல் பத்திரம்) செயல்படுவது – உச்சநீதிமன்றத்தால் கடும் கண்டனத் துக்கு ஆளாவது, இயற்கைப் பேரிட ரில் கூட கட்சிக் கண்ணோட்டத்தோடு நடந்துகொள்வது உள்ளிட்ட மக்கள் விரோத மோடி தலைமையிலான ஆட்சியை வீழ்த்துவது சித்தாந்த ரீதியாகவும், திராவிடர் கழகத்துக்கு முக்கிய பங்கு உண்டு.
‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” (நூலாசிரியர் கி.வீரமணி) என்ற 48 பக்க நூல் ஒன்றும் திராவிடர் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனைகளை ஆதாரங் களுடன் நூல் ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும் திராவிடர் கழகத்தின் வெளியீடுகள் முக்கியத் துவம் பெற்று வந்திருக்கின்றன – பொது மக்களால் வரவேற்கவும்பட்டுள்ளன.
தேர்தலில் நேரடியாக ஈடுபடாத சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்திற்கு நாட்டை யார் ஆளவேண்டும் – யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கக்கூடிய சமூக நலனில் பெரிதும் அக்கறை உண்டு.
கடந்த காலங்களில் தேர்தல்களில் திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்கதாகவும் இருந்திருக்கிறது.
நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கடமை உணர்ச்சி யின் அடிப்படையில் திராவிடர் கழகத் தலைவர் மேற்கொள்ள விருக்கும் பயணம் வெளியிடப்படுகிறது.
கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், வேட்பாளரை யும், சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொறுப்பாளர்களையும் அணுகி, கழகத் தலைவர் மேற்கொள்ளும் பிரச்சாரப் பயணத் தைத் திட்டவட்டமான வகையில் வெற்றிகரமாக நடத்திட ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சுற்றுப்பயண விவரம் அருகே காண்க.