“இந்தியா கூட்டணி ஏன் வெற்றி பெற வேண்டும்?” புவனகிரியில் இரா.பெரியார்செல்வன் சிறப்புரை

1 Min Read

புவனகிரி, மார்ச் 26- சிதம்பரம் மாவட் டம் புவனகிரியில் 14.3.2024 வியாழன் மாலை 6 மணிக்கு வெள்ளாற்றுப் பாலம் முகப்பில் – “இந்தியா கூட்டணி ஏன் பெற்றி பெற வேண்டும்?” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கழக இணைச் செயலாளர் யாழ்.திலீபன் தலைமையேற்றார்.
மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன், மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மாவட்ட பகுத்தறி வாளர் கழகத் தலைவர் கோவி.நெடுமாறன் ஆகியோர் முன்னி லையேற்று உரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தொடக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி தலைமைக் கழக பேச்சாளர் கோ. மோகனதாஸ் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார்செல்வம் சிறப்புரை யாற்றினார். அவர், மோடி ஆட்சியில் ஸநாதன தர்மம்தான் சட்டமமாக ஆக்கப்படும்; வரு கின்ற தேர்தலில் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் அண்ணல் அம்பேத்கர் எழுதிய சட்டம் நீக்கப்பட்டு இந்துத்துவா சட் டம் கொண்டுவரப்படும்; அதைத் தடுக்க வேண்டுமானால், ‘இந் தியா’ கூட்டணி ஆட்சியைப் பிடிக்க வேண்டும், தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியை சிறப்பாக நடத்திவரும் – முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்.

உலக அரங்கில், சர்வாதிகாரி ஹிட்லரை வீழ்த்தியவர், ரஷ்யத் தலைவர் ஸ்டாலின் ஆவார். அதுபோல, இந்தியாவில் மோடி என்கிற சர்வாதிகாரியை வீழ்த் தப்போவது, நம் திராவிட மாடல் நாயகன் மு.க.ஸ்டாலின் ஆவார் – என நீண்டதொரு உரை யாற்றினார்.
பிறகு, பெருமாத்துரைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண் டர் ச.பழனியாண்டி அவர்களின் 90ஆவது பிறந்த நாள் விழாவை ‘கேக்’ வெட்டி கழகத் தோழர்கள் கொண்டாடினார்கள். சாலியத் தோப்பு சி.லெனின் கலந்து கொண்டார். இறுதியில், புவன கிரி ஒன்றியத் தலைவர் ஏ.பி. இராமதாசு நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *