எழுமலையில் கழகப் பொதுக்கூட்டம் துணைப்பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உரை

1 Min Read

எழுமலை, மார்ச் 26- உசிலம் பட்டி மாவட்ட திராவி டர் கழகத்தின் சார்பில், தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட எழுமலை பேரூராட்சி யில், பெரியார் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவும், கலைஞர் நூற் றாண்டு விழாவும் சிறப் பாக நடைபெற்றது.
இப் பொதுக்கூட்டத் தில் சிறப்புரையாற்றிய கழக துணைப் பொதுச் செயலாளர் வழக்குரை ஞர் சே.மெ.மதிவதனி உரையில், பாசிச சக்தி களை எதிர்த்தும், திமுக உள்ளிட்ட இந்தியா கூட் டணி வெல்லவேண்டும் – ஏன்? என்றும் மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கழகத் துணை தலைவர் அழ. சிங்கராசன் தலைமை ஏற்றார். எழுமலை நகர தலைவர் வரவேற்புரை ப.அய்யாத் துரை ஆற்றினார். உசி லம்பட்டி மாவட்ட தலைவர் த.ம.எரிமலை, உசிலம்பட்டி மாவட்ட செயலாளர் பா. முத்துக் கருப்பன் முன்னிலை ஏற் றனர்.

நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் அ. மன் னர்மன்னன், மாவட்ட பக அமைப்பாளர் ச. பால்ராசு, மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ. முருகானந்தம், மாவட்ட து. செயலாளர் து.சந்தி ரன், மாநகர் மாவட்ட செயலாளர் இரா. லீ. சுரேஷ், மேலூர் மாவட்ட மகளிரணி செயலாளர் பெ.பாக்கியலட்சுமி, மாவட்ட மாணவர் கழக தலைவர் ப.வெங்கடே சன், மாவட்ட மாணவர் கழகச் செயலாளர் தரணீ தரன், போக்குவரத்து கழக தொழிற்சங்க செய லாளர் ரகுராமன், பேரூ ராட்சி சேர்மன் ஆர்.பி. ஜெயராமன், திமுக நகர செயலாளர் கே.டி.ரஹ மத்துல்லா, திமுக பொரு ளாளர் எழுமலை, திமுக. மாவட்ட வழக்குரைஞர் அணி கே.பி.பிரபு, பேரை யூர் நகர தலைவர் ஆர். பாண்டியராஜன் நன்றி யுரை வழங்கினார்.
தோழமைக்கட்சி பொறுப்பாளர்களும், தோழர்களும், பொதுமக் களும் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு சிறப் பான ஆதரவை வழங்கி னர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *