தஞ்சையில் திராவிடர் கழகப் பொதுக்குழு

viduthalai
1 Min Read

திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள இராமசாமி திருமண மண்ட பத்தில் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த் தினி தலைமையில் நேற்று மாலை 5:30 மணிக்கு கூடியது. அவர் செயலவைத் தலைவராகப் பொறுப்பேற்று தலைமை வகித்த முதல் பொதுக்குழு என்ற முறையில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவர் சி.அமர்சிங் வரவேற்று உரையாற்றினார். தொடக்கத்தில் கழக இளைஞரணி மாநில செயலாளர் நாத்திக.பொன்முடி கடவுள் மறுப்புக் கூறினார். கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார். பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 2023 மே 13இல் ஈரோட்டில் நடைபெற்ற கழகப் பொதுக்குழுவுக்குப் பின் நடைபெற்ற கழகச் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். தீர்மானங்களை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்மொழிய அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி தீர்மானங்களை ஒருமனதாக ஆதரித்தனர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மாநில தலைவர் வா.நேரு சில நிமிடங்கள் பேசினார். நிறைவுரையைக் கழகத் தலைவர் வழங்கினார். மாவட்ட செயலாளர் அருணகிரி நன்றி கூறினார்.
அனைவருக்கும் இரவு உணவு அளித்து மகிழ்ந்தனர். குறுகிய கால இடைவெளியில் குமரி முதல் திருத்தணி வரை உள்ள கழகப் பொறுப்பாளர்கள் வருகை தந்தது சிறப்பானதாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *