முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான காளாஞ்சிமேடு முருகையன் அவர்களின் மகனும், ஆவடி மாவட்டம் முகப்பேர் திராவிடர் கழகத் தோழருமான, ஓய்வுபெற்ற த.நா.வீ.வ.வாரியப் பொறியாளர் மு.இளங்கோ (வயது 79) நேற்று (25-03-2024) மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
ஆவடி மாவட்டத் திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவும், உதவியும் செய்து வந்தவர்.
இன்று காலை 10 மணிக்கு, அவரது விருப்பப்படி கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் ‘உடற்கொடை’ அளிக்கப்பட்டுள்ளது. இயக்கப் பற்றோடு இயங்கிய அவரது மறைவால் இழப்புக்கு ஆளாகியுள்ள குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
26.3.2024