பொறியாளர் இளங்கோ மறைந்தாரே!

1 Min Read

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான காளாஞ்சிமேடு முருகையன் அவர்களின் மகனும், ஆவடி மாவட்டம் முகப்பேர் திராவிடர் கழகத் தோழருமான, ஓய்வுபெற்ற த.நா.வீ.வ.வாரியப் பொறியாளர் மு.இளங்கோ (வயது 79) நேற்று (25-03-2024) மாலை மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து வருந்துகிறோம்.
ஆவடி மாவட்டத் திராவிடர் கழகம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குத் தொடர்ந்து ஆதரவும், உதவியும் செய்து வந்தவர்.
இன்று காலை 10 மணிக்கு, அவரது விருப்பப்படி கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் ‘உடற்கொடை’ அளிக்கப்பட்டுள்ளது. இயக்கப் பற்றோடு இயங்கிய அவரது மறைவால் இழப்புக்கு ஆளாகியுள்ள குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தோழர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
26.3.2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *