தஞ்சைப் பொதுக்குழுவில் கழக நூல் வெளியீடு

1 Min Read

நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்களுக்குத் தெளிவூட்டும் வகையிலும், மீண்டும் மோடி ஆட்சி ஏன் வரக்கூடாது என்பதை விளக்கும் வகையிலும், திராவிடர் கழகத்தின் சார்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட “மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப்போம்!” என்ற நூல் தஞ்சையில் நேற்று (25.3.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வெளியிடப்பட்டது. திராவிடர் கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வெளியிட, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெற்றுக் கொண்டார். கழகத் தோழர்களும் வரிசையாக மேடைக்கு வந்து 50, 100 என்ற எண்ணிக்கையில் கழகத் தலைவரிடம் பெற்றுக் கொண்டனர். மக்கள் மத்தியில் இதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கழகத் தோழர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். நூல் ஒன்றின் நன்கொடை ரூ. 20 ஆகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *