கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

24.9.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

👉மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகளுக்கு வராது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த பிரதமர் மோடி பயப்படுவது ஏன்? ராகுல் காந்தி கேள்வி

👉இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி அரசு மரியாதையுடன் மேற் கொள் ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

👉 வகுப்புவாத, ஊழல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க 2024 தேர்தலில் பா.ஜ.க. வீழ்த்தப்பட வேண்டும். சிஏஜி அறிக்கையில் வெளியிடப்பட்ட ரூ.7.5 லட்சம் கோடி ஊழல் பற்றி பிரதமர் மோடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 

தி டெலிகிராப்:

👉’சரோஜினி நாயுடு 1925இல் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 100 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ். படிநிலையில் எந்தப் பெண்மணியாவது முதலிடம் பிடித்தது உண்டா? காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி.

👉 புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை மோடி மல்டி பிளக்ஸ் அல்லது மோடி மேரியட் என்று அழைக்க வேண்டும் என ஜெய்ராம் ரமேஷ் கிண்டல்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *