அகில இந்திய பகுத்தறிவாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் சுடேஷ்கதிராவ் கன்னியாகுமரி வருகை

0 Min Read

அகில இந்திய பகுத்தறிவாளர் சங்க பொதுச்செயலாளர் மகாராட்டிர மாநிலம் நாசிக் பேராசிரியர் சுடேஷ் கதிராவ் வாழ்விணையர் சீலா சுடேஷ் கதிராவ் ஆகியோர் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழக அலுவலகமான நாகர்கோவில் பெரியார் மய்யத்திற்கு வருகை தந்தார்கள். அவர்களுக்கு குமரிமாவட்ட கழக தலைவர் மா.மு.சுப்பிரமணியம் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். குமரிமாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தந்தை பெரியார் மற்றும் தமிழர் தலைவர் கி.வீரமணி ஆகியோரின் கருத்துகள் அடங்கிய ஆங்கில நூல்களை வழங்கினார். திராவிடர் கழக செயல்பாடுகளை நாசிக் பேராசிரியர் கழக பொறுப்பாளர்களிடம் கேட்டறிந்தார். கழக மாவட்டத் துணைத்தலைவர் ச .நல்ல பெருமாள் உடனிருந்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *