பிரதமர் மோடி என்ன சாதித்தார்? – சு.சாமி சாட்டை

1 Min Read

மதுரை,மார்ச் 25- பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான சுப்ரமணியசாமி மதுரை தெப்பக்குளத்தில் நடந்த பாஜக நிர்வாகி இல்ல திருமணத்திற்கு நேற்று (24.3.2024) வந்திருந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “அண்ணாமலை வெற்றி பெறுவாரா என தெரியாது. வேட்பாளர்களை எல்லா இடத்திலும் நிறுத்தலாம். அமைப்பு வலுவாக உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். பணத்தை கொடுத்து விளம்பரம் செய்தால் மட்டும் போதாது. மக்கள் நம்ப வேண்டும். என்னதான் செய்தார் மோடி? ஒன்றுமே செய்யவில்லை. நான் எல்லாவற்றையும் பையில் வைத்துக் கொண்டு சென்றுவிடுவேன் என மோடி நினைப்பதால் என்னை தூரமாக வைத்துள்ளார். மோடி பிரதமராக மீண் டும் வரக்கூடாது. அவரை தோற்கடிக்க வேண்டும். மோடி ஆட்சியில் இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையவில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் சிறப்பாக செயல்படவில்லை. சீனா இந்தியாவில் செய்யும் ஆக்கிர மிப்பை பிரதமர் மோடி தடுக்கவில்லை. மாலத்தீவுடன் பிரச்சினை உள்ளது. மோடி எதுவுமே செய்யவில்லை” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *