நாடு முழுவதும் மோடி எதிர்ப்பலை காலியானது பா.ஜ.க. கூடாரம்

viduthalai
2 Min Read

பெங்களூரு,மார்ச் 25- நாடு முழுவதும் பாஜக மற்றும் மோடிக்கு எதிரான அலை தீவிரமடைந்துள்ளது. இதனை முன்கூட் டியே உணர்ந்த பாஜகவினர் தங்களுக்கு சீட் வேண்டாம் என கட்சியை விட்டு ஓட்டம் பிடித்து வருகின்றனர். சிலர் ஒன்றிய அமைப்புகளின் நடவடிக்கைக்கு பயந்து அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக நழுவி வருகின்றனர்.
இந்நிலையில், கருநாடக மாநிலத்தின் தெற்கு பெங்களூரு மக்களவை தொகுதியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், நிர் வாகிகள், தொண்டர்கள் என நூற்றுக் கணக்கானோர் 23.3.2024 அன்று இரவு காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். காங் கிரஸ் கட்சியில் இணைந்தவர்களில் பெரும்பாலானோர் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், தேர்தல் நேரத்தில் ஒரு தொகுதியே காலிக் கூடாரமானது பாஜகவினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேஜஸ்வி சூர்யா கலக்கம்
வெறுப்பு பேச்சிற்கு பிரபலமான பாஜகவின் தேஜஸ்வி சூர்யா மீண்டும் தெற்கு பெங்களூரு தொகுதியில் போட்டியிட உள்ளார். கடந்த முறையைப் போன்றே இம்முறையும் மக்களவை உறுப்பினராகி அமைச்சர் பதவியை பெற்று விட வேண்டும் என தேஜஸ்வி சூர்யா கனவில் உள்ள நிலையில், அவரது சொந்த தொகுதியில் பாஜகவினர் கூண்டோடு காங்கிரசில் இணைந்து இருப்பது அவருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல்
வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான
முதல் கட்ட பயிற்சி வகுப்பு தொடக்கம்
சென்னை,மார்ச் 25- மக்களவை தேர் தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக நியமிக்கப்பட்ட 19 ஆயிரம் பேருக்கு தேர்தல் பயிற்சி நேற்று (24.3.2024) அளிக் கப்பட்டது. அதை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு ஒன்றிய, மாநில அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் வாக்குச்சாவடி அலுவலர் களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் 16 சட்டப் பேரவை தொகுதிகளில் 3,726 வாக்குச் சாவடிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் 19,396 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இவர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி வகுப்பு 16 மய்யங்களிலும் நேற்று நடை பெற்றது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் சரிபார்ப்பு காகிதத் தணிக்கை இயந்திரம் (விவிபாட்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து செயல்முறை விளக்கம் மூலம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
எழும்பூர் தொகுதி, ராட்லர் தெரு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரை களை வழங்கினார்.
முன்னதாக, மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்ட சிறப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை விவேகானந்தர் இல்லம் அருகில் நடைபெற்றது. இதில் மாவட்ட தேர்தல் அதிகாரி ராதா கிருஷ்ணன் பங்கேற்று கொடியசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *