பிஜேபியின் தோல்வி நூறு விழுக்காடு உறுதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு

2 Min Read

சென்னை,மார்ச் 25- தென் இந்தி யாவில் மட்டுமல்ல, வட மாநிலம், வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறு தியாகிவிட்டது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். சிறீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகு திக்கு உள்பட்ட வளசரவாக்கத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி களின் செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (21.3.2024) நடந்தது. இதில் திமுக பொரு ளாளர் மற்றும் சிறீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் டி.ஆர்‌.பாலு மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து நிர் வாகிகளிடம் விளக்கிக் கூறினர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியதாவது:
தமிழ்நாட்டிற்கு பாஜக தொடர்ந்து ஓரவஞ்சனை செய்து வருகிறது. நாம் கேட்ட எந்த நிதியையும் அவர்கள் தரவில்லை. இதை சுட்டிக்காட்டி 6 முறை நாடாளுமன்றத்தில் டி.ஆர். பாலு பேசினார். பாஜகவின் தோல்வி முகத்தை கடந்த ஒரு வாரமாக நடந்து வரும் நிகழ்வுகளைக் கொண்டு நாம் அறிய முடியும். வடகிழக்கு மாநிலங்கள் என 7 மாநிலங்களைச் சொல்வார்கள்.
அதில், நாகாலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மூன்று மாநிலங் களில் பாஜ போட்டியிடாது, மாநிலக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என அறிவித்துள் ளனர். இந்த மூன்று மாநிலங்கள் மட்டுமல்ல, வடகிழக்கில் உள்ள 7 மாநிலங்களிலும் பாஜக டெபாசிட் பெற முடியாது என்ற காரணத்தை உணர்ந்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களில் 3இல் இருந்து விலகி உள்ளனர். போகப் போக எத்தனை மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறோம் என சொல்வார் களோ தெரியாது. பாஜக ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில் வதோதரா மற்றும் சம்பர்கந்தா மக்களவை தொகுதிகளுக்கு பாஜக சார்பில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள், ரஞ்சன்பென் பட் மற்றும் பிகாஜி தாக்கூர் ஆகியோர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதற்கு அர்த்தம், தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. வெற்றி பெறாத இடத்தில் நாங்கள் ஏன் நிற்க வேண்டும் என விலகி உள்ளனர். தென் இந்தியாவில் மட்டுமல்ல, வட மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும், பாஜவின் தோல்வி 100 சதவீதம் உறுதியாகி உள்ளது. பாஜக ஆட்சியில் வெறுப்பு அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் ஒரு முதலமைச்சர் கைது செய்யப்பட் டார். தற்போது டில்லி முதலமைச்சர் கைதாகியுள்ளார். இரண்டு மாத காலத்தில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட இரு மாநில முதலமைச்சர்கள் கைது செய்யப்படுவது, இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. இந்தியா கூட்டணியின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும்.
-இவ்வாறு அவர் பேசினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *