கைதுகள் ஏன்?

1 Min Read

70 ஆண்டு களுக்குப் பிறகு ஆம் ஆத்மி என்னும் கட்சி டில்லி மாநிலத்தில் ஆட்சியைப்
பிடித்தது.

அவர்கள் தமிழ்நாட்டு மாடலை முன்னுதாரணமாகக் கொண்டு ஏழைகள் படிக்கும் பள்ளியை உயர்தர கல்வி நிலையங்களாக நவீன வசதிகளோடு மாற்றினர். ஏழை மக்கள் வாழும் பகுதிகளிலேயே கல்வி கற்க, மாலை நேர தரமான பயிற்சி நிலையங்களை உருவாக்கினர்.

குடிசைப் பகுதிகளில் 12 மணிநேரம் செயல்படும் ‘‘மஹொல்லா கிளீனிக்” எனப்படும் சிறு சுகாதார நிலையங்களை உருவாக்கினர்.
ஆனால், இதை செய்த டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஓராண்டாக சிறையில். தற்போது முதலமைச்சர் கெஜ்ரிவால் சிறையில்!

‘நீ எதையும் கொடு; ஆனால், கல்வியோடு, சுகாதாரத்தையும் சாமானியர்களுக்குக் கொடுத்துவிடாதே!’ என்ற சாணக்கியனின் சூது மூளையும், மனுதர்மத்தின் பிடியும் இன்றும் உள்ளன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!

‘‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!” என்கிற மனுதர்மத்தை இன்றளவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்ற பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கல்வியை அடித்தட்டு ஏழை மக்கள் அளவுக்கு யார் கொண்டு சென்றாலும், அவர்களைத் தங்களுக்குள்ள அனைத்து முயற்சியாலும் தடுக்க முனைவர். அதுவும் அதிகாரம் தங்கள் கையில் இருந்தால், கேட்கவே வேண்டாம்!

இவர்களை அடையாளம் காண்பீர்!

 

– மயிலாடன்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *