டி.எம்.எஸ். நூற்றாண்டு நிறைவு

1 Min Read

திராவிடர் கழகம்
டி.எம்.எஸ். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் திரைத்துறைப் பாடகராக இருந்தவர். பத்மசிறீ, கலைமாமணி விருதுகளைப் பெற்றவர். 2010ஆம் ஆண்டில் கோவையில் நடந்த, செம்மொழி மாநாட்டிற்காக உருவான ‘செம்மொழியான தமிழ்மொழியாம்’ என்ற பாடல்தான் அவர் பாடிய கடைசிப் பாடல். இன்று மார்ச் 24 டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாள். சில ஆண்டுகளுக்கு முன்னால் டி.எம்.எஸ். அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, ’கடவுள் நம்பிக்கை உள்ள எனக்கு இவ்வளவு அருமையான வரவேற்பு கிடைக்கும் என்று எண்ணவில்லை. பெரியார் திடல் பற்றி நான் கொண்டிருந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டேன்’ என்று கூறினார். ஆசிரியருடன் நீண்ட நேரம் உரையாடி விடைபெற்றார். (ஒளிப்படத்தில் உடனிருப்பது திரைப்படக் கலைஞர் விஜயராஜ்.)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *