விழுப்புரம், மார்ச் 24- விழுப்புரம் மாவட்டகழகத் தலைவர், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்ப ராயன் அவர்கள் 18.3.2023 அன்று அதிகாலை 3 மணியளவில் இயற்கை எய்தினார்.
அவரது இறதி நிகழ்ச்சி 19.3.2024 அன்று பகல் 3 மணிக்கு நடைபெற்றது. முன்னதாக திராவி டர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மறைந்த மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் உடலுக்கு தலைமைக் கழகம் சார்பில் மாலை வைத்து இறுதி மரியாதை செய் தார். பொதுச் செயலாளர் வீ.அன் புராஜ் தலைமையில் வீரவணக்க இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் பெருநகர தி.மு.க. செயலாளர் இரா.சக்கரை, புதுச் சேரி மாவட்ட தலைவர் வே.அன் பரசன், விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, திண்டிவனம் மாவட்ட தலைவர் இர.அன்பழகன், திண்டிவனம் மாவட்ட செயலாளர் செ.பரந்தா மன், திண்டிவனம் மாவட்ட ப.க. செயலாளர் நவா.ஏழுமலை, விழுப் புரம் மாவட்ட ப.க. தலைவர் துரை.திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட ப.க. செயலாளர் தொல் காப்பியன் சிவராசன், விழுப்புரம் மாவட்ட ப.க. பொறுப்பாளர் வே.ரகுநாதன், காப்பாளர் புதுவை இரா.சடகோபன், தலைமைக் கழக அமைப்பாளர் தா.சி.இளந்திரை யன், விழுப்புரம் மாவட்ட துணைத் தலைவர் திருநாவுக்கரசு, விழுப்புரம் மாவட்ட துணைச் செயலாளர் ரமேஷ், விழுப்புரம் மாவட்ட இளைஞரணிச் செயலா ளர் அ.சதீஷ், விழுப்புரம் மாவட்ட மக்கள் அதிகாரம் மாவட்ட செய லாளர் ஏழுமலை, விழுப்புரம் மாவட்ட செயலாளர் அரங்க.பரணீதரன், ஒலக்கூர் ஒன்றிய கழக செயலாளர் ஏ.பெருமாள், செஞ்சி சாக்ரடீஸ், சிபிஅய் மாநில செயற் குழு உறுப்பினர் ஏ.வி.சரவணன், காப்பாளர் வேட்டவலம் பட்டாபி ராமன், மயிலம் ஒன்றிய கழக செயலாளர் தழுதாளி ச.அன்புக் கரசன், தலைமைக் கழக அமைப் பாளர் தா.இளம்பரிதி ஆகியோர் வீரவணக்க இரங்கல் உரை ஆற் றினார்கள்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்கள் தெரிவித்த இரங்கல் செய்தி படிக்கப் பட்டு அதன் நகல் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும் விக்கிர வாண்டி சட்டமன்ற உறுப்பினரு மான நா.புகழேந்தி, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், மேனாள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சே.புஷ்பராஜ், சி.பி.எம். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.இராமமூர்த்தி, மாநில ஒருங் கிணைப்பாளர் ஆ.இரவி கார்த்தி கேயன், விடுதலைச் சிறுத்தைகள் மாநகர தலைவர் ர.பெரியார், சி.பி.அய். மாவட்ட செயலாளர் சவுரிராஜன், கள்ளக்குறிச்சி மேனாள் மாவட்ட கழக தலைவர் பெரியசாமி, மருதம்பூண்டி கருப் புச்சட்டை ஆறுமுகம், உளுந்தூர் பேட்டை கழக செயலாளர் சக்தி வேல், விழுப்புரம் மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் பகவன் தாஸ், செஞ்சி கழக நந்தகுமார், வேட்டவலம் நகர கழக தலைவர் சு.ஏழுமலை, வேட்டவலம் இரா.திருமலை, திண்டிவனம் மாவட்ட கழக மகளிரணி விஜயலட்சுமி, மயிலம் ஒன்றிய கழக தலைவர் இரா.பாவேந்தர், திண்டிவனம் நகர கழக தலைவர் உ.பச்சையப்பன், திண்டிவனம் நகர கழக செயலாளர் சு.பன்னீர்செல்வம், திண்டிவனம் மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர், கணபதிப்பட்டு கழக தட்சிணாமூர்த்தி, திண்டிவனம் மாவட்ட கழக இளைஞரணி அமைப்பாளர் கே.பாபு, கோனே ரிக்குப்பம் ப.க. தேவேந்திரன், திண்டிவனம் மாவட்ட கழக அமைப்பாளர் வில்லவன் கோதை, உளுந்தூர்பேட்டை கழக முத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட கழக செயலாளர் சுந்தரராஜன், வளவ னூர் க.மாறன், காணை ஒன்றிய தலைவர் மு.நாராயணன், பழங்குடி இருளர் பாதுகாப்பு நிறுவனர் செஞ்சி சுடரொளி சுந்தரம், பனப் பாக்கம் தி.மு.க. பெருமாள், செஞ்சி தென்னரசு, பொதுக்குழு உறுப் பினர் பதுவை கோ.பழனி, செஞ்சி ந.கதிரவன், புதுவை மாவட்ட இளைஞரணித் தலைவர் தி.இராசு, புதுச்சேரி நகர கழக தலைவர் மு.ஆறுமுகம், புதுவை விடுதலை வாசகர் வட்ட செயலாளர்
ஆ.சிவராசன் உள்பட அனைத்துக் கட்சி பொறுப்பாளர்கள், தோழர் கள் கலந்து கொண்டு வீரவணக்க இரங்கல் தெரிவித் தார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் விழுப் புரம் நகர செயலாளர்கள் இரணி யன், சரவணன், மாவட்ட தொழி லாளரணி செயலாளர் பெ.சக்ர வர்த்தி, ச.எடிசன்ராஜா, விழுப் புரம் ப.க. கவுதமன், விழுப்புரம் ப.க. இரவிச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு வீரவணக்க இரங் கல் தெரிவித்தனர்.
மறைந்த மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் அவர்களின் வாழ்வி ணையர் சு.செல்வி, மகன்கள் சு.கமலக்குமார், சு.கரிகாலன், மரு மகள்கள் க.தமிழ்குயில், க.ஜெய ஞான பிரியா, பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு வீரவணக்க இரங்கல் தெரிவித் தார்கள்.
பிற்பகல் 3 மணியளவில் விழுப் புரம் மின் மயான இடுகாட்டில் எவ்வித சடங்குகளுமின்றி உடல் எரியூட்டல் செய்யப்பட்டது.
மறைந்த மாவட்ட தலைவர் உடல் வேனில் இருந்து இறக்கப் பட்டபோது பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தானும் கை கொடுத்து எரி மேடை வரை வந்து இறக்கி வைத்து வீரவணக்க இரங்கல் தெரிவித்தது காண் போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.
நிகழ்ச்சியை தலைமைக் கழக அமைப்பாளர் தா.இளம்பரிதி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.பானிவேல் ஆகி யோர் ஒருங்கிணைத்தார்கள்.
விழுப்புரம் மாவட்ட தலைவர் ப.சுப்பராயன் அவர்களின் இறுதி நிகழ்வு
Leave a comment