சுயதொழில் செய்பவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்கும் செயல்திட்டம்

1 Min Read

திருச்சி, செப்.25- சுயதொழில் முனைவோர்கள், வண்டி இழுக்கும் தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப வீட்டுக் கடன் வழங்கும் செயல்முறையை எளிமையாக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவான ஒப்புதல் களுடன் நிதி சேவைகளை அக்ரிம் அவுசிங் ஃபைனான்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் வழங்கி வருகிறது.

நகர்ப்புறங்களின் வளர்ச்சியால் வீட்டுக் கடன் தேவைகள் அதிகரித்துள்ளதால் இந்நிறுவனம் தனது விரிவாக்க நடவடிக்கையால் திருச்சி, ஹூப்ளி மற்றும் ராய்ப்பூரில் மூன்று புதிய கிளைகளைத் தொடங்குகிறது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருச்சி அலுவலகம், எஸ்.பி.ஆர் கேட், தில்லை நகரில் அமைந்துள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வீட்டுக்கடன் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்ற முக்கிய ஃபின்டெக் தீர்வு, புதுமை யான தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகள் மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகிறோம் என இந்நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் மால்கம் அதைடே தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *