கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

2 Min Read

23.3.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* உச்சநீதிமன்றம் விதித்த கெடுவுக்கு பணிந்தார் ஆளுநர். க.பொன்முடி மீண்டும் அமைச்சரானார்: உயர்கல்வித்துறை ஒதுக்கீடு.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
* தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க.விற்கு ரூ.1751 கோடி நன்கொடை கொடுத்த நிறுவனங்களுக்கு ரூ.3.7 லட்சம் கோடி அளவில் மோடி அரசு ஒப்பந்தங்களை அளித்துள்ளதாக மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் குற்றச்சாட்டு.
* மேனாள் எம்.பி. ராஜ்குமார் சைனி தலைமையிலான பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு இந்தியா கூட்டணிக்கு ஆதரவு.
* பொன்முடி அமைச்சராக பதவியேற்பு – சட்டம் வென்றது என்கிறது தலையங்க செய்தி.
தி இந்து
* 2004இன் வரலாறு 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழும்: “இந்தியா” கூட்டணி மகத்தான வெற்றி பெறும், மக்களவை தேர்தல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* எதிர்க்கட்சிகளை அணிதிரட்டவும், ஒழுங் கமைக்கவும், ஆட்சி செய்யவும் அனுமதிக்காத அரசு உங்களிடம் இருந்தால், “நாங்கள் ஜனநாயக நாடு” என்று காட்டிக் கொள்வது கடினம். அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரதாப் பானு மேத்தா.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
* எஸ்பிஅய் வெளிப்படுத்திய தரவுகளின்படி, 2019 தேர்தல்கள் நடந்துகொண்டிருக்கும்போது, பத்திரங்கள் மூலம் வந்த அனைத்து நிதிகளில் 84%அய் பா.ஜ.க. கட்சி திரட்டியது அம்பலம்.
* எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரம் விவகாரத்தில் தில்லுமுல்லுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், முறைகேடு செய்தவர்கள் தேசத்துரோக குற்றத்திற்காக தூக்கிலிடப்படுவார்கள் என்கிறார் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திக் விஜய் சிங்.
* பிஎம் கேர்ஸ் நிதியின் பின்னணியில் உள்ள ‘ரகசியங்கள்’ இந்தியா கூட்டணியின் வெற்றியின் மூலம் அம்பலமாகும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தி டெலிகிராப்
* அதிகார அத்துமீறல் செய்ததற்காக பா.ஜ.க. விலை கொடுக்க வேண்டும். எமர்ஜென்சி காலத்தில் மக்கள் காட்டிய கூட்டுப் பலத்தை தேர்தலில் காட்டுவார்கள் என நம்பிக்கை உள்ளது : அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து சரத் பவார்.
-குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *