என்று தணியும் இந்தக் கொடுமை? நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்கு

Viduthalai
1 Min Read

அரசியல்

ராமேசுவரம், செப்.25- நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி, மீனவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியதால் பர பரப்பு ஏற்பட்டது.

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் (23.9.2023) 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500-க் கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

அவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடல் பகுதியில் மீன் பிடித்தபோது 2 சிறிய ரோந்து கப்பலில் இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.

ராமேசுவரம் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

அப்போது இலங்கை கடற் படையினர் கப்ப லில் இருந்தபடி கற்களை வீசி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய தாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப் படுகிறது.

இதனால் இலங்கை கடற் படைக்கு பயந்து மீனவர்கள் குறைந்த அளவிலான மீன்களுடன் நேற்று (24.9.2023) காலை கரை திரும்பினார்கள்.

நடுக்கடலில் நடந்த தாக்குதல் மீனவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம் பகுதியில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது மீன வர்கள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இலங்கை கடற்படை தாக்குதலை தடுத்து நிறுத்த ஒன்றிய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *