திருவையாறு வடிவேலு மறைவு – விழிக்கொடை

1 Min Read

திருவையாறு, மார்ச் 22- திருவையாறு வேலு சிட்பண்ட்ஸ் நிறுவனர் முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் மு.வடிவேலு (வயது-91) வயது மூப்பின் காரணமாக நேற்று (21-.3-.2024) மாலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்
அவரது இரு விழிகளும் மதுரை அரவிந்த் கண் மருத்துவ வங்கிக்கு கபிஸ்தலம் பெரியார் சேவை மய்யம் மூலம் கொடையாக வழங்கப்பட்டது. நிகழ்வினை தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர் சிங், பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர் வி.மோகன், திருவை யாறு வழக்குரைஞர் ஸ்டாலின் ஆகியோர் முன்னின்று நிகழ்த் தினர்.
திருவையாறு,விளாங்குடி சாலை சின்னம்மாள் நகர் அவர் களது இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் 22-.03.-2024 மாலை 3 மணி அளவில் புறப்படுகிறது.
அவருக்கு டி.வி.பன்னீர்செல் வம், டி.வி.செல்வகுமாரன், டி.வி. கலைச் செல்வன் ஆகிய மகன்களும் பொற்செல்வி, ஜெயந்தி ஆகிய மகள்களும் உள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கழகப்பொறுப்பா ளர்கள் இறுதி மரியாதை செலுத் தினர். தொடர்புக்கு: மகன் டி.வி.செல்வக் குமரன் 9976092246, 94866 34888

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *