அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கத்தின் ஆண்டு விழா ‘மண்டல் குழு பரிந்துரையின் இன்றைய நிலை’ கருத்தரங்கம்

1 Min Read

அரசியல்

சென்னை, செப்.26 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணி யாளர் நலச் சங்கத்தின்(AIIoBobcSwa)  16ஆம் ஆண்டு விழாவும், ‘மண்டல் குழு பரிந்துரைகளின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான கருத்தரங்கமும் சென்னை – ராயப்பேட்டை சுவாகத் விடுதியில் 23.9.2023 அன்று மாலை சிறப்பாக நடைபெற்றது.

சங்கத்தின் ஆண்டு விழாவிற்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கிய வாழ்த்துச் செய்தியினை சங்கத்தின் செயல் தலைவர் படித்தார்.

இந்த விழாவில், சங்கத்தின் புரவலரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்புத் தலைவருமான டி.கே.எஸ். இளங்கோவன் சிறப்புரை ஆற்றினார். அனைத் திந்திய இதர பிற்படுத்தப்பட்டோர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்புக் குழு உறுப்பின ருமான கோ. கருணாநிதி, சமூகநீதி கண்காணிப்புக் குழுவின் மற்றொரு உறுப்பினரான ஏ. ஜெய்சன் திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

விழாவிற்கு வருகை தந்தோரை வரவேற்று சங்கத்தின் செயல் தலைவர் ரவீணா விஜயகுமார் பேசினார். நிறைவாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ. ராஜசேகரன் நன்றி கூறினார். 

காலையில் நடைபெற்ற நிகழ்வில் சங்கத்தின் தலைவராக டி. பெலிக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சங்கத்தின் துணைத் தலைவர்களாக அபிலேஷ், நாகராஜன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் அய்.ஓ.பி. வங்கியில் பணியாற்றிய மூத்த தோழர்கள் ராமு (வயது 91), பெத்தாட்சி (வயது 89) ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எஸ்.சி.,/எஸ்.டி., பணியாளர் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் சசிகுமார் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிறுவனங்களின் இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கங்களின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *