வட சித்தூர் பெரியார் சிலை அவமதிப்பு பா.ஜ.க. பிரமுகர்கள் சிக்கினர் – கைது

1 Min Read

கோவை, செப்.26  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை  காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கிணத் துக்கடவு அருகே உள்ள வட சித்தூரில் பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வரு கிறார்கள். சமத்துவபுரம் நுழைவு வாயிலில் மார்பளவு கொண்ட பெரியார் சிலை வைக்கப்பட்டு உள்ளது. கம்பி வேலி அமைக்கப் பட்டு அதற்குள் சிலை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. இந்தநிலையில் செப்.20ஆம் தேதி காலை பெரியார் சிலை மீது யாரோ மாட்டு சாணத்தை வீசி அவமதிப்பு செய்து இருந்தனர்.

அங்கு திரண்ட திராவிடர் கழகம் திமுக, விடுதலை சிறுத் தைகள் கட்சியினர், பெரியார் சிலையை அவமரியாதை செய்த வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி முழக்கமிட்டனர். காவல் துறையினர் அவர்களை சமாதா னப்படுத்தி அனுப்பி வைத்தனர். . பின்னர் சிலையின் மீது வீசப்பட்டு இருந்த சாணத்தை தண்ணீர் ஊற்றி கழுவினர். 

இந்த செயலில் ஈடுபட்டது யார், எதற்காக ஈடுபட்டனர் என்று காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இன்று (26.9.2023) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர் வடசித்தூர் பகுதியில் பாஜக பிரமுகர்களாக வலம் வரும் கோகுல் மற்றும் ராஜா ஆகிய இருவர் மீதும் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர்கள் குற்றவாளிகள் என்று உறுதி யானது. பின்னர் அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *