கல்லக்குறிச்சி – ஊராங்கானி கிராமத்தில், திராவிடர் கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் அவர்கள் மா.ஏழுமலை – அ.ஜெயலட்சுமி ஆகிய இணையருக்கு சுயமரியாதை திருமணம் செய்து வைத்தார். அவ்விணையருக்கு கடந்த14.11.2023 செவ்வாய் அன்று, ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நிலவழகன் என்ற பெயர் சூட்டப் பட்டதின் மகிழ்வாக சங்கராபுரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழகத் தலைவர் மா.ஏழுமலை ‘விடுதலை’ வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடை வழங்கினார்.