தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு – மாணாக்கர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

2 Min Read

சென்னை,செப்.26- தமிழ்நாடு அரசின் கல் லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு  கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல்  பட்டப் படிப்பில் (எம்.எட்.,) மாணாக்கர் சேர்க்கை 25.9.2023 அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன் விவரம் வருமாறு:

தமிழ்நாட்டில்   உள்ள அரசு  கல்வியியல்  கல்லூ ரிகளில்   முதுநிலை     கல் வியியல் பட்டப்படிப்பு (எம்.எட்.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக் கான (2023-2024) விண் ணப்பங்களை <https://www.tngasaedu.in>  என்ற இணைய தள முகவரியில்  பதிவு செய்யலாம். 

விண்ணப்பம் பதிவு செய்ய ஒவ்வொரு கல் லூரிக்கும்,  விண்ணப்பக் கட்டணம் ரூ.58 மற்றும் விண்ணப்ப பதிவுக் கட்டணம் ரூ.2/. மொத்தம் ரூ.60/.   (ரூபாய் .அறுபது மட்டும்) செலுத்தப் பட வேண்டும்.   SC/SCA/ ST  விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப  பதிவுக் கட்டணம் ரூ.2/- (ரூபாய் இரண்டு மட்டும்) செலுத் தினால் போதுமானது.   

மாணாக்கர்கள் விண் ணப்பிக்கும் போது தங்க ளது  விருப்ப  வரிசைப்படி கல்லூரிகளைத் தெரிவு செய்தல் வேண்டும்.  இது தொடர்பான கூடுதல்  விவரங்கள்  www.tngasa.in <https://www.tngasaedu.in>   என்ற இணைய தள முகவரியில் தெரிவிக் கப்படும்.

விண்ணப்பம்  மற்றும் பதிவுக் கட்டணம் : 

விண்ணப்பக் கட்ட ணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை  விண்ணப் பதாரர்கள்   Debit Card / Credit Card / Net Banking / UPI  மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம்.  இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இய லாத மாணாக்கர்கள் கல் லூரி  சேர்க்கை உதவி மய்யங்களில் “ The Director, Directorate of Collegiate Education, Chennai  என்ற பெயரில் 25.09.2023 அன்று அல் லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரை வோலை மூலமாகவும் அல்லது  நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற் குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள் ளலாம்.

இணையதள வாயி லாக விண்ணப்பப் பதிவு துவங்கும் நாள்: 25.09.2023

இணையதள வாயி லாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்:          -30.09.2023

தொடர்பு எண் : 93634 – 62070,   93634 – 62007, 93634 – 62042,     93634 – 62024.

இவ்வாறு தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி இயக்ககம், கல்லூரிக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *