நாட்டில் விற்பனையாகும் 40 விழுக்காடு மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்: ஒன்றிய அரசு ஒப்புதல்

1 Min Read

புதுடில்லி, செப். 26- மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்க ளுள் ஒன்றாக உள்ளது.

நாட்டில் விற்பனை செய் யப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டி லிருந்து தயாரிக்கப்பட் டவை என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சக வாகன் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட நான்கு சக்கர மின்சார வாகனங்களை தயாரிக்கும் 10 பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட் டில் உள்ளன.

வாகன் வலைதள புள்ளி விவரத்தில், நடப்பாண்டு ஜனவ ரியில் இருந்து செப்டம் பர் 20 வரையில் நாடு முழுவதும் உள்ள வட் டார போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) பதிவு செய்யப் பட்ட மின்சார வாகன எண்ணிக்கை 10,44,600-ஆக உள்ளது.

இதில் தமிழ்நாட்டில் உள்ள ஆர்டிஓ அலுவல கங்களில் இருந்து மட்டும் பதிவான மின் வாகனங் களின் எண்ணிக்கை 4,14,802-ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

2025-க்குள் மின் வாகன தயாரிப் புக்காக ரூ.50,000 கோடி தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படு கிறது.

2030-க்குள் இந்தியா வில் விற்பனையாகும் அனைத்து வகையான மின்சார வாகனங்களி லும் 30 சதவீத பங்களிப் பினை வழங்க தமிழ்நாடு இலக்கு நிர்ணயித்துள் ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *