உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

அரசியல்

உசிலம்பட்டி, செப். 26 –  உசிலம் பட்டியில் 24/09/2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் இணைந்து திருப் பரங்குன்றம் நகரில் நடத் திய கூட்டத்தில் தோழ மைக் கட்சிகள் உட்பட கலந்து கொண்டனர், 

மேலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலட்சுமி தலை மையில் உசிலம்பட்டி மாவட்ட தலைவர் த. ம. எரிமலை வரவேற்றார். மாவட்ட செயலாளர்,  பா.முத்துக்கருப்பன்  முன்னிலையில்  கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்.

மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ. பாலா நன்றி கூறினார்.

கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்: கா. சிவகுருநாதன் பொதுக் குழு உறுப்பினர், ச. பால்ராசு பகுத்தறிவாளர் கழக தலைவர், இரா. கலைச்செல்வி உசிலம் பட்டி மாவட்ட மகளி ரணி அமைப்பாளர், ஏ.பி.சாமிநாதன் உசிலம் பட்டி மாவட்ட இளை ஞரணி செயலாளர், ஜெயராமன் பெரியார் பெருந் தொண்டர், பி.ஆர். காளியப்பன் பகுதி கழக செயலாளர் மதுரை மாநகர், பவுன்ராசா மாந கர் பகுதி கழக செயலாளர், பேக்கரி கண்ணன் பகுதி கழக செயலாளர் மதுரை மாநகர், மாணவர் கழக தேவராஜ் பாண்டி யன்ணி, வெங்கடேசன், மற்றும் ஏராளமான தோழமைக்கட்சிகளின் பொருப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *