உசிலம்பட்டியில் பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

அரசியல்

உசிலம்பட்டி, செப். 26 –  உசிலம் பட்டியில் 24/09/2023 அன்று தந்தை பெரியார் 145ஆவது பிறந்த நாள் விழா, டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, மதுரை மேலூர் மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழகம் இணைந்து திருப் பரங்குன்றம் நகரில் நடத் திய கூட்டத்தில் தோழ மைக் கட்சிகள் உட்பட கலந்து கொண்டனர், 

மேலூர் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பெ.பாக்கியலட்சுமி தலை மையில் உசிலம்பட்டி மாவட்ட தலைவர் த. ம. எரிமலை வரவேற்றார். மாவட்ட செயலாளர்,  பா.முத்துக்கருப்பன்  முன்னிலையில்  கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா சிறப்புரை ஆற்றினார்.

மேலூர் மாவட்ட செயலாளர் ஜெ. பாலா நன்றி கூறினார்.

கலந்து கொண்ட பொறுப்பாளர்கள்: கா. சிவகுருநாதன் பொதுக் குழு உறுப்பினர், ச. பால்ராசு பகுத்தறிவாளர் கழக தலைவர், இரா. கலைச்செல்வி உசிலம் பட்டி மாவட்ட மகளி ரணி அமைப்பாளர், ஏ.பி.சாமிநாதன் உசிலம் பட்டி மாவட்ட இளை ஞரணி செயலாளர், ஜெயராமன் பெரியார் பெருந் தொண்டர், பி.ஆர். காளியப்பன் பகுதி கழக செயலாளர் மதுரை மாநகர், பவுன்ராசா மாந கர் பகுதி கழக செயலாளர், பேக்கரி கண்ணன் பகுதி கழக செயலாளர் மதுரை மாநகர், மாணவர் கழக தேவராஜ் பாண்டி யன்ணி, வெங்கடேசன், மற்றும் ஏராளமான தோழமைக்கட்சிகளின் பொருப்பாளர்களும், தோழர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *