கோலாலம்பூரில் பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு புக்கிட் பிருந்தோங் தமிழ் பள்ளியில் பயிலும் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவரும் பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசியா தலைவருமான மு கோவிந்த சாமி ஏற்பாட்டில் நடைபெற்றது.