மீனவர்கள் மானியத்தில் கருவிகள் வாங்க நிதி ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு

1 Min Read

சென்னை, செப். 26 – 1000 நாட்டுப்படகு மீனவர்களுக்கு 40% மானியத்தில் கருவிகள் வாங்க ரூ.4.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கால்நடை மற்றும் மீன்வளத்துறை கூடு தல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரத்தில் கடந்த ஆக.18ஆம் தேதி நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் 1,000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40% மானியத்தில் வெளிப் பொருத் தும் மற்றும் உட்பொருத்தும் கருவிகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் வெளியிட்டார்.

அதன்படி, பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்களுக்கு உதவிடும் பொருட்டு 2023-2024ஆம் நிதியாண்டில் மாநில அரசு நிதியின் கீழ், பாரம்பரிய நாட்டுப்படகு மீன வர்களுக்கு 1,000 எண்ணிக்கையிலான 28 குதிரைத் திறனுக்கு குறைவான சக்தியுடைய வெளிப்பொருத்தும் மற்றும் உட்பொருத்தும் கருவிகளை, ஒன்றின் விலை ரூ.1.20 லட்சம் என்ற அடிப்படையில் 40 விழுக்காடு மானி யத்தில் வழங்கிட நிர்வாக ஒப்புதலும் மானியத் தொகை யாக மொத்தம் ரூ.4.80 கோடி நிதி ஒப்பளிப்பும் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *