கடந்த 9.1.2024 அன்று சீர்மரபினர் சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள 68 சீர்மரபினர் சமூகத்தினருக்கு கடந்த ஆட்சியில் DNC/DNT என்று இரண்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை நீக்கி ஒரே சான்றிதழ் வழங்க அறிக்கை கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். ஆசிரியரும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதியளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக கடந்த 16.3.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அனைவருக்கும் DNT என்று ஒரே சான்றிதழ் வழங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார். இதற்குக் காரணமாக இருந்த ஆசிரியருக்கு தங்களின் மகிழ்வினை தெரிவிப்பதற்காக ஊராளிக்கவுண்டர் முன்னேற்ற சங்கத் தலைவர் செ.கணேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஆசிரியரைச் சந்தித்து நன்றியைத் தெரிவித்தனர். (பெரியார் திடல், 19.3.2024)
ஒரே சான்றிதழ் வழங்க அறிக்கை
1 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books