தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 11 புது முகங்கள்

2 Min Read

சென்னை, மார்ச் 21- மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் பல்வேறு கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
வேட்புமனு தாக் கல் நேற்று (20.3.2024) தொடங்கி யுள்ளது.

முதன்முதலாக கூட்டணி பேச்சு வார்த்தையைத் தொடங்கிய திமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்கி தொகுதி பங்கீட்டையும் முதலில் நிறைவு செய்தது.
திமுகவை பொறுத்தவரை, 21 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கிறது. திமுக கூட்டணியில் ஏற்கெனவே விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் தொகுதிகள், அய்யூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் மற்றும் மதிமுகவுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததன் மூலம் திமுக நேரடியாக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நேற்று (20.3.2024) திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டி யிடும் வேட்பாளர்கள் விவரங் களை மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

திமுகவின் 21 தொகுதிகள்: தென் சென்னை _ தமிழச்சி தங்க பாண்டியன், மத்திய சென்னை _ தயாநிதி மாறன், வட சென்னை _ கலாநிதி வீராசாமி, சிறீபெரும் புதூர் _ டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் _ செல்வம், வேலூர் _ கதிர் ஆனந்த், அரக்கோணம் _ ஜெகத்ரட்சகன், திருவண்ணாமலை _ அண்ணா துரை, ஆரணி _ தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி _ மலையரசன், தருமபுரி _ மணி, கோவை _ கணபதி ராஜ்குமார், பொள்ளாச்சி _ ஈஸ்வரசாமி, சேலம் _ -டி.எம்.செல்வகணபதி, ஈரோடு _ பிரகாஷ், நீலகிரி (தனி) _ ஆ.ராசா, தஞ்சாவூர் _ முரசொலி, பெரம்பலூர் _ அருண் நேரு, தேனி _ தங்க தமிழ்செல்வன், காசி (தனி) _ ராணி, தூத்துக்குடி _ கனிமொழி

11 புதுமுகங்கள்: புதிய வேட் பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட் டுள்ளனர். 3 பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலில் 6 வழக்குரைஞர்கள், 2 முனைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் 2 மருத்துவர்கள், 19 பட்டதாரிகள் இடம் பெற்றுள்ள னர். அமைச்சர் நேருவின் மகன் அருண் நேரு பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வேலூர் தொகுதியில் அமைச் சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள், தவிர கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *