கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

21.3.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை:
♦ பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு விலக்கு, சமூக நீதி உள்ளிட்டவைகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
♦ பீகாரில் ஜன் அதிகார் கட்சியின் தலைவர் பப்பு யாதவ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததோடு தனது கட்சி யையும் காங்கிரஸ் கட்சியில் இணைத்தார்.
♦ இதேபோல் உத்தரப்பிரதேசத்தின் அம்ரோகா மக்களவை தொகுதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்பியான டேனிஷ் அலி டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:
♦ திரிபுராவில் பாரதிய ஜனதாவுக்கு எதிராக இந்தியக் கட்சிகள் உட்பட 8 கட்சிகள் கூட்டுப் பிரச்சாரத்தில் ஈடுபட முடிவு.
♦ டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட ஜக்கிக்கு அவசர ‘மூளை அறுவை சிகிச்சை’ செய் யப்பட்டது,
♦ ஒரே நாடு ஒரே தேர்தல் யோசனை, அரசமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டுமானத்திற்கும், உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு பரிட்சை போன்றது என்கிறார் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன்.
♦ திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார். ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கருநாடக தேர்தல் அதிகாரிக்கு அறிவுறுத்தல்

தி இந்து:
♦ தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ஆதரவாகவும், தனது கட்சியின் பிரசாரங்களுக்கு நிதி அளிப்பதற்காகவும் பிரதமர் மோடியால் வளர்க்கப்பட்ட ‘நரேந்திர மோடியின் கோடீஸ்வரர்கள் ராஜ்ஜியம்’, பிரிட்டிஷ் ஆட்சியில் இருந் ததை விட இன்றைய மோடி ஆட்சியில் ஏழை- கோடீஸ் வரர்கள் இடையே ஏற்றத்தாழ்வு அதிகரித்துள்ளது’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்

டைம்ஸ் ஆப் இந்தியா:
♦ ரூ.1,344 கோடியில், மும்பையில் உள்ள 66 நிறுவ னங்கள் அனைத்து தேர்தல் பத்திரங்களில் 11% வாங்கி யுள்ளன.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *