வடக்குத்து அரசு தொடக்கப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!

Viduthalai
1 Min Read

அரசியல்

வடக்குத்து, செப். 26- வடக்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 21.9.2023 அன்று காலை 11 மணியளவில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட அமைப்பாளர் மணி வேல் தலைமையில் நடந்தது. 

மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன், ஒன் றிய தலைவர் கனகராஜ், கிளைக் கழக தலைவர் தங்க பாஸ்கர், செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கு பெற்றனர். மாணவர்களுக்கு எழுது பொருள்கள் வழங்கப்பட்டன. அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. தந்தை பெரியாரின் தொண்டினை பாராட்டி அவரின் அருமை பெரு மைகளை விளக்கி கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந் திரசேகரன் சிறப்புரை ஆற்றினார். மரக்கன்றுகளை வழங்கினார். 

முடிவில் திராவிடன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *