பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வாரவிழா – புத்தகக்கண்காட்சி

1 Min Read

தமிழ்நாடு

திருச்சி, நவ. 22- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் தேசிய நூலக வார விழாவினையொட்டி கலைஞூர் கருணாநிதி நூலகம் மருந்தியல் மாணவர்களுக்கான புத்தகக் கண்காட்சியினை 20.11.2023 அன்று நடத்தியது. 

பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தா மரை அவர்கள் துவக்கி வைத்த இப்புத்தகக் கண் காட்சியில் நியூசென்சுரி புத்தக நிலையம்,  காவேரி புத்தக நிலையம் மற்றும்  திருச்சி புத்தகநிலையம் பலபொது அறிவு, நல வாழ்வு, போட்டித் தேர்வு கள் மற்றும் மருந்தியல் துறை சார்ந்த பல புத் தகங்களை காட்சிப்படுத் தின..

மருந்தியல் மாணவர் கள் மற்றும் பேராசிரியர் கள் இப்புத்தகக் கண்காட்சியினை பார்வையிட்டு அறிவுக்கு விருந்தளிக்கும் பல அரிய புத்தகங்களை வாங்கிச் சென்றனர் என் பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடு களைநூலகர் எஸ்.மீரா மற்றும் துணை நூலகர் அ.சமீம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *