பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி

Viduthalai
1 Min Read

பூவிருந்தவல்லி, செப். 26- தந்தை‌ பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழ கம் பூவிருந்தவல்லி பகுதி சார்பில் கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல்  பூவிருந்த வல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன் தலைமையில் துவங்கியது.

முதலில் வசந்தபுரி பகுதியில் தோழர் ஆட் லின் கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.பின் வசந்தபுரி சர்ச்தெருவில் பூவை லலிதா , தாங்கலில் விஜய குமார், ராஜா நகரில் திராவிடர் கழக மாநில மாணவர் கழகச் துணைச் செயலாளர் தொண்டறம், ஜட்ஜ் செல்லப்பா தெரு வில் பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், குமணன் சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் பகுத் தறிவு அவர்களும் கொடி ஏற்றினார்கள். 

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,  ஆவடி மாவட்ட மகளி ரணி தலைவர் பூவை செல்வி, பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணி மாறன், ஒன்றிய செயலா ளர் சு.வெங்கடேசன்,  இனநலம், சந்திரபாபு, இப்ராஹிம், ரமேஷ், பால சந்தர், மற்றும் பெரியார் பிஞ்சுகள் ஜெப்ரி, லியாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் வாழ்த்து முழக்கமிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *