பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி

1 Min Read

பூவிருந்தவல்லி, செப். 26- தந்தை‌ பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழ கம் பூவிருந்தவல்லி பகுதி சார்பில் கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல்  பூவிருந்த வல்லி நகர தலைவர் பெரியார் மாணாக்கன் தலைமையில் துவங்கியது.

முதலில் வசந்தபுரி பகுதியில் தோழர் ஆட் லின் கொடி ஏற்றி துவக்கி வைத்தார்.பின் வசந்தபுரி சர்ச்தெருவில் பூவை லலிதா , தாங்கலில் விஜய குமார், ராஜா நகரில் திராவிடர் கழக மாநில மாணவர் கழகச் துணைச் செயலாளர் தொண்டறம், ஜட்ஜ் செல்லப்பா தெரு வில் பெரியார் சுயமரி யாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், குமணன் சாவடி பேருந்து நிறுத்தம் அருகில் பகுத் தறிவு அவர்களும் கொடி ஏற்றினார்கள். 

நிகழ்வில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,  ஆவடி மாவட்ட மகளி ரணி தலைவர் பூவை செல்வி, பூந்தமல்லி நகர செயலாளர் தி.மணி மாறன், ஒன்றிய செயலா ளர் சு.வெங்கடேசன்,  இனநலம், சந்திரபாபு, இப்ராஹிம், ரமேஷ், பால சந்தர், மற்றும் பெரியார் பிஞ்சுகள் ஜெப்ரி, லியாண்டோ ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் வாழ்த்து முழக்கமிட்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *