அன்னை மணியம்மையாரின் 46 ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் நுழைவுவாயிலில் உள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையாரின் சிலைகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வெ.இராமச்சந்திரன், பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு அன்னை மணியம்மையாருக்கு வீரவணக்கம் செலுத்தினர். (வல்லம், 16.3.2024).