அரூர் தோழர் மார்க்ஸ் மறைவு! கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

1 Min Read

அரூர், மார்ச் 18- அரூர் நகர பகுத்தறி வாளர் கழக செயலாளர் தோழர் மார்க்ஸ் உடல்நிலை குறைவு ஏற் பட்டு பெங்களூர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் 11.3.2024ஆம் தேதி மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் சொந்த ஊரான ஈட்டியபட்டிக்கு கொண்டு செல் லப்பட்டது.

அரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெய ராமன் தலைமை ஏற்று வீரவணக் கம் செலுத்தி மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் கழக காப்பாளர் அ.தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் அரூர் ச. ராஜேந்திரன், திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா. செல்லதுரை, மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர் சா. கிருஷ்ண மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சாக்கன்சர்மா, மகளிர் அணி தோழர்கள் மணிமேகலை, வேல் விழி, கல்பனா, உமா, பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் பிலவங் கன், துரைராஜ், கவிஞர் பிரேம் குமார், பிரகாஷ், அம்ரித்கான், ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி மறைவுற்ற தோழர் மார்க்ஸ் துணைவியார் சென்னம்மாவுக்கு ஆறுதல் கூறிச் சென்றனர். நிகழ்வில் திமுக, கம் யூனிஸ்ட் இயக்கங்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பா ளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக வந்திருந்து இறுதி மரி யாதை செலுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *