நடக்க இருப்பவை

2 Min Read

 28.9.2023 வியாழக்கிழமை

தந்தை பெரியார்பிறந்தநாள், 

முத்தமிழ றிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

ஆண்டிமடம்: மாலை 4 மணி * இடம்: கடைவீதி, ஆண்டிமடம் * வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட இ.அ.தலைவர்) தலைமை: தியாக. முருகன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (காப்பாளர்), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை:  வழக் கறிஞர் பூவை.புலிகேசி (கழக சொற்பொழி வாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபால கிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: 

டி.எஸ்கே. அண்ணாமலை (நகர செயலாளர்) * கூட்ட ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆண்டிமடம் ஒன்றியம்.

29.9.2023 வெள்ளிக்கிழமை

தூத்துக்குடி மாவட்ட 

கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி: மாலை 5:00 மணி * இடம்: தூத்துக்குடி பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங்கம். * தலைமை: மு.முனியசாமி (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (கழகக் காப்பாளர்), சு.காசி (கழகக் காப்பாளர்)  * வரவேற்புரை: கோ.முருகன் (மாவட்டச் செயலாளர்) * உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: 1. தமிழர் தலைவர் அவர்கள் சேரன்மாதேவி வருகை 2. விடுதலை சந்தா சேர்ப்பு * நன்றியுரை:  ச.வெங்கட்ராமன் (தலைவர், மாவட்ட ப.க.) * ஏற்பாடு: மாவட்டத் திராவிடர் கழகம், தூத்துக்குடி மாவட்டம்)

1.10.2023 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி 127ஆம் தொடர் சொற்பொழிவு

கல்லக்குறிச்சி: காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை * இடம்: மாவட்ட ஓய்வூதியர் சங்கக் கட்டடம், கல்லக்குறிச்சி * தலைமை: சிலம்பூர்க்கிழான் (தலைவர், மாவட்ட இலக்கிய அணி, பகுத்தறிவு இலக்கிய மன்றம்) * வரவேற்பு: சி.முருகன் * முன்னிலை: மருத்துவர் 

கோ.சா.குமார் (மாநிலத் கழக மருத்துவ அணிச் செயலர்), ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்) * சிற்றுரை: தந்தை பெரியாரும் அண்ணல் காந்தியாரும், பெ.எழிலரசன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * நன்றியுரை: இரா.முத்துசாமி (நகர கழக தலைவர்) * இவண்: பகுத்தறிவு இலக்கிய மன்றம், கல்லக்குறிச்சி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *