பிஜேபியின் அடாவடித்தனம்: தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய பிஜேபி மாவட்ட தலைவர் கைது

1 Min Read

மயிலாடுதுறை, மார்ச் 17- தருமபுரம் ஆதீனகர்த்தரை பணம் கேட்டு மிரட் டிய வழக்கில், பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

தருமபுரம் ஆதீனகர்த்தர் தொடர் பான வீடியோ, ஆடியோ இருப்பதாகக் கூறி, பணம் கேட்டு சிலர் மிரட்டுவதாக ஆதீனகர்த்தரின் சகோதரர் விருத்தகிரி, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடந்த பிப்.25ஆ-ம் தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் 9 பேர் மீது காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து, தனியார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, திருவெண்காடு சம்பாகட்ட ளையைச் சேர்ந்த ரவுடி விக்னேஷ், ஆடுதுறை வினோத், நெய்க்குப்பையைச் சேர்ந்த நிவாஸ் ஆகிய 4 பேரை பிப். 28ஆ-ம் தேதி கைது செய்தனர்.
மேலும், இதில் தொடர்புடைய பாஜக மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் க.அகோரம் உள்ளிட்ட 5 பேரை தேடி வந்தனர்.
இந்நிலையில், மும்பையில் பதுங்கியிருந்த பாஜக மாவட்டத் தலைவர் அகோரத்தை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரை நேற்று (மார்ச் 16) மயிலடுதுறைக்கு அழைத்து வந்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *