சென்னையில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா

viduthalai
1 Min Read

சென்னை, மார்ச் 16– பகுத்தறிவாளர் கழகம் சார்பில் உலக உழைக்கும் மகளிர் நாள் விழா, அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் 9.-3.-2024 அன்று மாலை நடைபெற்றது.

பகுத்தறிவுப் பெண் போராளிகள் என்ற தலைப் பில் நடைபெற்ற நிகழ் வுக்கு பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் வேண்மாள் தலைமையேற்றார்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைத் தலைவர் முனைவர் சுலோசனா இராசா வரவேற்று உரையாற்றினர்.
நிகழ்ச்சியினை பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச் செல்வன் தொடங்கி வைத்தார்.
மூவலூர் இராமாமிர் தம் அம்மையார் குறித்து கவிஞர் சுபா அருணா சலம், அன்னை மணியம் மையார் பற்றி சிந்தனை களை முனைவர் சாலினி ஜெரால்ட், அன்னை நாகம்மையார் குறித்து செல்வி கோ.பிரியங்கா, அன்னை சாவித்திரி பாய் பூலே குறித்து புதிய குரல் தோழர் ஜனனி அவர் களும் பெண் போராளி களின் நினைவுகளை எடுத்துரைத்தனர்.

நிகழ்வில் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவாள ராக வாழ்ந்த மறைந்த தோழர்கள் விசாகப்பட் டினம் இந்திய நாத்திக சங்கத்தின் நிறுவனர் டாக்டர் ஜெய கோபால், கேரளா யுக்த வாதி சங்கத்தின் முன் னோடி யு.கலாநாதன் ஆகியோரின் படங்களை கழகத்தின் பொருளாளர் வீ.குமரேசன் திறந்து வைத்து அவர்கள் ஆற் றிய தொண்டினை எடுத் துக்கூறினார். நிகழ்ச்சி யில் ஏராளமான தோழர் கள் கலந்துகொண்டனர்.
நிறைவாக தோழர் ஆசுகவி இனியா நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *