மதவாதம் நம்மை காட்டுமிராண்டி வாழ்க்கைக்குத்தான் இழுத்துச்செல்லும்!

viduthalai
1 Min Read

மதவாதம் மக்களை எப்படிப் பட்ட அறிவீலித்தனமான நிலைக்கும் இழுத்துச்செல்லும் என்பதற்கு இந்தப் படங்கள் ஒரு உயிரோட்டமான எடுத்துக் காட்டு.
மத நம்பிக்கைகளை வைத்து அரசியலை தீர்மானிக்க மக்கள் முனைந்தால், அரசியல்வாதிகள் எதையும் செய்வார்கள் – செய்யத் துணிவார்கள் என்பதற்கு சான்றுகள் இதுதான். இங்கு கற்றவர்கள் கல்லாதவர்கள் என அனைவருமே இந்த மதவாதப் பிடியில் சிக்கிக் கொள்கின்றனர்.
மதவாதம் நம்மை பழைமை யான காட்டுமிராண்டி வாழ்க் கைக்குத் தான் இழுத்துச் செல்லும். அதுவே அரசியல் லாபத்திற்கும் – தனி நபர்களின் கொள்ளைக்கும் – பெரும் பான்மை மக்களை சீரழிக்கும் நிலைக்கும் இழுத்துச்செல்லும்.
இந்த நாடு கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் மோசமான ஒரு நிலையை அடைந்துள்ளது.
இந்த மோசமான நிலையை மக்களின் மனதில் காட்டாமல் இருக்க அத்தனை ஊடகங்களையும் கையில் போட்டு மதவாத வேடமிட்டு அதைத் தொடர்ந்து காண்பித்து ஏமாற்றி வாழும் சூழல்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *