அமெரிக்காவில் சட்டம் படிக்கச் செல்லும் உச்ச நீதிமன்ற ‘கேன்டீன்’ சமையல்காரர் மகளுக்கு தலைமை நீதிபதி பாராட்டு தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள ‘கேன்டீனில்’ சமையல்காரராக பணி யாற்றுபவரின் மகள் பிரக்யாவுக்கு அமெரிக்காவில் உள்ள 2 முன்னணி பல்கலைக்கழகங்களில் சட்டமேற்படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்து உள்ளது. அதற்காக உதவித்தொகை கிடைத் துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அமெரிக்காவில் மிக்சிகன், கலிபோர்னியா ஆகிய 2 பல்கலையில் முதுநிலை சட்டப்படிப்பு கிடைக்க உதவித்தொகை கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த தலைமை நீதிபதி சந்திர சூட், மாணவி பிரக்யாவின் குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார். மேலும் இந்திய அரசியல் சட்டம் தொடர்பான 3 புத்தகங்களில் கையெழுத்து போட்டு மாணவி பிரக்யாவுக்கு அவர் பரிசாக வழங்கி, ‘அமெரிக்காவில் படித்து முடித்து விட்டு தாய்நாட்டிற்கு வந்து மீண்டும் சேவை செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
நீதிமன்ற உணவகத்தின் கடைநிலை ஊழியரின் மகளை சட்டம் படிக்கவைத்து மேற்படிப்பிற்கு அமெரிக்கா அனுப்பிவைத்த தலைமை நீதிபதி
Leave a comment