குடந்தை வய்.மு.கும்பலிங்கம்
கடவுள் என்பதா?
கடவுள் எனபவனா?
கடவுள் என்பவளா?
கடவுள் என்பவரா?
கடவுள் என்பவர்களா?
கடவுள் என்பவையா?
கடவுள் ஆணா?
கடவுள் பெண்ணா?
கடவுள் இரண்டும் கெட்டானா?
கடவுள் அஃறிணையா?
கடவுள் உயர்திணையா?
கடவுள் என்பது இரண்டும் கெட்டான் திணையா?
கடவுளுக்குக் குடும்பம் உண்டா?
கடவுள் தனி மனிதரா? அல்லது கூட்டு மனிதரா?
கடவுளுக்குப் பிறப்பும் இறப்புமான வரலாறு உண்டா?
கடவுளுக்கு ஆசாபாசமான விருப்பு வெறுப்பு உண்டா?
கடவுள் பிள்ளை குட்டிகள் – பேரன் பேத்திகள் உள்ளவரா?
கடவுள் வீடு, வாசல், தோப்பு, துரவு உள்ளவரா?
கடவுள் வாகனம் பெற்றவரா?
கடவுள் மனிதரினும் மேம்பட்டவரா? உயர்ந்தவரா? தனிப்பட்டவரா? வேறுபட்டவரா?
கடவுள் இயற்கையானவரர்? அன்றிச் செயற்கையானவரா?
கடவுள் தனக்குத்தானே மூலமாகவும், முதலாகவும் இருந்து தனியனாய்த் தோன்றியவரா?
கடவுள் கண்டுபிடிக்கப்பட்டவரா? அன்றி உண்டாக்கப்பட்டவரா?
கடவுளுக்கு ஊர், உலகம் குலம், கோத்திரம், உண்டா?
கடவுள் குணம், மணம், வண்ணம், கொள்கை, கோட்பாடு உள்ளவரா? கொண்டவரா?
கடவுள் ஜாதி, மதம், சமயம், குலம், கோத்திரம், இனம், நாடு, மொழி, பண்பாடு கடந்தவரா?
கடவுளுக்கு வண்ணம், நிறம், வேறுபாடு, மாறுபாடு வித்தியாசங்கள் உண்டா? தெரியுமா?