தமிழவேள் கோ.சாரங்கபாணியின் 50 ஆம் ஆண்டு நினைவு நாள்!

1 Min Read

தமிழ்­மொழி சிங்­கப்­பூ­ரில் அதி­காரத்­துவ மொழி­யாக தலைநிமிர வித்­திட்­ட தமிழ வேள் கோ.சாரங்கபாணியின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் நாளை (16-3-2024) சனிக்கிழமை கடைப்பிடிக்கப் படுகிறது.
இதையொட்டி, தமிழவேள் நற்பணி மன்றம் ஏற்பாட்டில் சிங்கப்பூரில் உள்ள ‘லிட்டில் இந்தியா’வில் இந்திய மரபுடைமை நிலையத்தில் நாளை (16-3-2024) காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற வுள்ளது.
இந்நிகழ்விற்கு, ‘லிஷா’ எனும் லிட்டில் இந்தியா வர்த் தகர்கள், மரபுடைமைச் சங்கத்தின் தலைவர் ரெகுநாத் சிவா தலைமை வகிக்க, ‘வளர்தமிழ்’ இயக்கத்தின் துணைத்தலைவர் ஜோதி. மாணிக்க வாசகம் முன்னிலை வகிக்கவுள்ளார்.
தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு தலைவரான அழகிய பாண் டியன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிகழ்வில் ‘தமிழவேளின் சீர்திருத்தங்கள்‘, ‘தமிழர் திருநாள் ஏற்படுத்திய தாக்கங்கள்’, ‘தமிழவேளின் இதழியல் பங்களிப்பு’ ஆகிய தலைப்புகளில் ஆசிரா முகம்மது பிலால், சுந்தர் பிலவேந்தர்ராஜ், மோனலிசா ஆகியோர் நினைவுரைகளும் ஆற்றவுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *