முதலமைச்சர்மீது போதைப்பொருள் விவகாரத்தில் அவதூறு பரப்பிய எடப்பாடி பழனிச்சாமி – பிஜேபி அண்ணாமலைக்கு எதிராக முதலமைச்சர் சார்பில் வழக்கு

viduthalai
3 Min Read

சென்னை, மார்ச் 15 போதைப் பொருள் விவகாரத்தில் தன்னை தொடர்புபடுத்தி குற்றம்சாட் டியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றவியல் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் பெருநகர அரசு தலைமை குற்றவியல் வழக் குரைஞர் ஜி.தேவராஜன் குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்துள் ளார். அதில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த மார்ச் 8-ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப் பில், போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தமிழ்நாடு முதல மைச்சரையும், தமிழ்நாடு அரசை யும் குற்றம்சாட்டி அவதூறு பரப்பியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. பேட்டியில் அவர் முழுக்க, முழுக்க முதலமைச்சருக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்துள்ளார். இது மக்கள் மத்தியில் முதலமைச்சரின் நற் பெயர், புகழுக்கு களங்கம் விளை விக்கும் செயல். இதன்மூலம் அர சியல் ரீதியாக பழனிசாமி ஆதாயம் தேட முற்பட்டுள்ளார். முதலமைச் சரின் பொதுமக்களுக்கான அன் றாட பணிகள், கடமையை செய் வதில் பழனிசாமி குறுக்கீடு செய்துள்ளார்.

ஆக்கப்பூர்வ நடவடிக்கை
தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க சட்ட ரீதியாக பல்வேறு ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடுத்து வருகிறார். காவல்துறையினரின் நடவடிக்கை யால் தமிழ்நாடு கஞ்சா சாகுபடியில் ‘பூஜ்ஜிய’ நிலையில் உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 10,665 போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19 வெளிநாட் டினர் உட்பட 14,934 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 28,383 கிலோ கஞ்சா, 63,848 போதை மாத்திரைகள், ஹெராயின், மெத்தம்பெட்டமைன் போன்ற பிற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப் பொருளுக்கு எதிரான தடுப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்த சூழலில் அமைச்சரவை யின் தலைவராக உள்ள முதலமைச் சருக்கு எதிரான இந்த அப்பட்ட மான குற்றச்சாட்டு மூலம், அவதூறு வழக்கு தொடர்வதற்கு அனைத்து முகாந்திரமும் உள்ளது. எனவே, பழனிசாமி மீது குற்றவியல் அவதூறு சட்டப் பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கோரப்பட் டுள்ளது.

அண்ணாமலைக்கு எதிராக..
இதேபோல, போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக முதலமைச்சரை தொடர்புபடுத்தி கடந்த பிப்ரவரி 29-ஆம் தேதி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் காட்சிப் பதிவு வெளியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராகவும், முதலமைச்சர் சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த 2 அவதூறு வழக்குகளும் சென்னை முதன்மை அமர்வு நீதி பதி எஸ்.அல்லி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

ரூ.1 கோடி இழப்பீடு கோரி திமுக வழக்கு:
போதைப் பொருள் விவகாரத் தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்புபடுத்தி பேசி, முதல்வரின் புகழுக்கும், நற் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தி யுள்ளதாக திமுக சார்பில் அமைப்புச் செயலாளரான ஆர்.எஸ்.பாரதி ரூ.1 கோடி இழப்பீடு கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனி சாமிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளார். போதைப் பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் குறித்து பேச பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *